Showing posts with label சிங்கம். Show all posts
Showing posts with label சிங்கம். Show all posts

Sunday, September 11, 2016

தந்திரம் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்

காட்டில் சிங்கம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது.  அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது.  அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடும். 

காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்ததது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேசவேண்டும் என தீர்மானம் போட்டது. 

சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன.  நீங்கள் எல்லா மிருகங்களையும் கொள்வது சரியான நியதி கிடையாது,  எனவே நாங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையடக்கூடாது,  நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் என கூறியது.

சிங்கமும் சரி என கூறியது.

தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திற்கு  உணவாக சென்றது. அன்று முயலின் முறை அது உணவாக சிங்கத்திடம் செல்லவேண்டும்.  மிகுந்த கவலையுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு கிணற்றை பார்த்தது.  ஒரு முடிவுக்கு வந்த முயல், பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜவிடம் சென்றது.

சிங்கராஜவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது.

சிங்கமும் காரணம் கேட்டது,  அதற்க்கு முயல் "சிங்கராஜவே நான் வரும் வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன் அது என்னை எங்கு செல்கிறாய் என கேட்டது. நான் சொன்னேன், எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று" 

அதற்க்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை,  இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என்றது " என கூறியது 

இதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது.

தந்திரம் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்

முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் கர்ஜித்தது, கர்ஜனை எதிரொலித்ததும் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது.

முயலின் புத்திசாலித்தனம் நிறைவேறியது.